498A குழந்தைகளின் பரிதாபமான நிலை

பொய் வரதட்சணை வழக்குப்போடும் மருமகள்களின் வீட்டில் இருக்கும் குழந்தைகள் படும்பாடு இதுதான்.

குழந்தை யாருக்கு?

விவாகரத்து வழக்குகளில் குழந்தைகளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
12/20/2011 தினகரன்

புதுடெல்லி : விவாகரத்து வழக்குகளில், குழந்தைகளின் விருப்பத்துக்கு நீதிமன்றங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

விவகாரத்து பெற்ற தம்பதிகள், அவர்களின் குழந்தைகளை தங்கள் பாதுகாப்பில் வளர்க்க உரிமை கோரி ஏராளமான வழக்குகள் தொடுக்கப்படுகின்றன. இது போன்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சதாசிவம், சலேமேஸ்வர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

17 வயது, 11 வயது மகள்களை தங்கள் பாதுகாப்பில் வளர்க்க பிரிந்து சென்ற பெற்றோர் உரிமை கோரினர். பிள்ளைகள் இருவரின் விருப்பத்தை நீதிபதிகள் நேரில் கேட்டனர். தந்தையிடம் வளர விரும்புவதாக இருவரும் கூறினர். இதையடுத்து தந்தையிடம் பிள்ளைகள் வளர உத்தரவிட்ட நீதிபதிகள், வார இறுதி நாட்கள் தாய் தனது மகள்களை சந்தித்து பேசலாம் என உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது:

இந்த வழக்கின் உண்மை நிலவரங்களை ஆராய்ந்து குழந்தைகளின் விருப்பத்தை கேட்டதில், தந்தையின் பாதுகாப்பில் குழந்தைகள் தொடர்ந்து வளர்ந்தால் சிறந்தது என முடிவு செய்தோம். தற்போது தந்தையின் பாதுகாப்பில் குழந்தைகள் வளர்ந்து வருவதை இடையூறு செய்வது நல்லதல்ல என கருதுகிறோம். தாய்க்கும் குழந்தைகளை பார்க்கும் உரிமை வழங்குவதன் மூலம் நீதி வழங்கப்பட்டதாக உணர்கிறோம்.

பிரிந்து சென்ற பெற்றோர் தொடுக்கும் வழக்குகளில் அவர்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், குழந்தைகளின் நலன் மற்றும் விருப்பத்துக்கு நீதிமன்றங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பாதுகாவலர் மற்றும் குழந்தைகள் சட்டம் 1890, இந்து சிறுபான்மையினர் மற்றும் பாதுகாவலர் சட்டம் 1956 ஆகியவற்றிலும், குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்றனர்.

உண்மையான குழந்தைகள் யார்?

இந்தியாவில் இப்போது அரசாங்க உதவியுடன் பொய் வரதட்சணை வழக்குகளால் பல குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்று சிதையும் குடும்பங்களில் இருக்கும் குழந்தைகளுக்கு அப்பா, அம்மா ஆகிய இருவரும் உயிரோடு இருந்தாலும் இறந்தவர்களுக்குச் சமம்தான்.

தவறான தூண்டுதல்களாலும், லஞ்சத்திற்காகவும் ஆசைப்பட்டு உருவாக்கப்படும் பல பொய் வரதட்சணை வழக்குகள் கடைசியில் விவாகரத்துக்களில்தான் போய் முடிகின்றன. இதன் மூலம் குடும்பங்கள் பிரியும்போது அந்தக் குடும்பத்திலுள்ள குழந்தைகள் கண்டிப்பாக தனது தந்தையை இழந்து விடும். இந்தியத் திருமணச் சட்டங்களும், வழக்குகளை தேவையில்லாமல் நீட்டித்து இன்பம் காணும் சட்ட நடைமுறைகளும் இந்த புண்ணிய காரியத்திற்கு மிகவும் உதவி செய்கின்றன.

இதன்விளைவாக பல குழந்தைகளுக்கு தன் தகப்பன் யாரென்று தெரியாமலும், அப்படித் தெரிந்தாலும் அவனைக் காணமுடியாமலும் இருக்கிறார்கள். அதுபோலவே தந்தைப் பாசத்துடன் பல தந்தையர்கள் தங்களது குழந்தைகளிடமிருந்து தவறான சட்டங்களால் பிரிக்கப்பட்டு மன வேதனை அடைந்துகொண்டிருக்கிறார்கள்.

சமூக மற்றும் இந்திய சட்டத்தின் கண்ணோட்டத்தில் பெண்ணுக்கு மட்டும்தான் குழந்தைப் பாசம் இருப்பதாகவும், ஆணுக்கு எந்தவித உணர்ச்சியும் இல்லை என்றும் ஒரு தவறான மனப்பான்மை இருந்து வருகிறது. இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த சமீபத்திய திரைப்படம் “தெய்வத் திருமகன்”. அந்தத் திரைப்படத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதுபோன்ற ஒரு துயரமான சூழலில் குழந்தைகளின் நலனுக்காகப் போராடும் Child Rights Initiative என்ற அமைப்பு சென்னையில் குழந்தைகள் தினத்தை உண்மையான குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியிருக்கிறார்கள். அதனை பின்வரும் வீடியோவில் பாருங்கள்.

இந்தியாவில் இனி இதுபோல நடக்குமா?


கல்விக்கு உகந்த விஜயதசமி நாளில் மழலைகளுக்கு வித்யாரம்பம் எனும் எழுத்தறிவிக்கும் பணியில் மழலைகளுடன் பெற்றோர்கள் உற்சாக பங்கேற்றனர்.இடம்: சரஸ்வதிகோயில், திருநெல்வேலி. (தினமலர் செய்திப் படம் 7/10/2011)
=====

இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்டுள்ள பல மருமகள் பாதுகாப்பு சட்டங்களால் (IPC498A, Domestic Violence Act) பல குடும்பங்கள் சிதைந்துள்ளன. இன்றும் பல குடும்பங்கள் சிதைந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில் பல குழந்தைகளுக்கு மேலை நாடுகளில் இருப்பது போல ஒற்றை பெற்றோர் மட்டுமே இருக்கிறார்கள். இது போன்று உருவாகிக்கொண்டிருக்கும் பல குடும்பங்களில் எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு தாய், தந்தை என்ற முழுமையான பெற்றோர்கள் இல்லாத எதிர்காலம்தான் காத்திருக்கிறது.

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்று உலகிற்கு பறைசாற்றிய இந்திய நாட்டில் இப்போது குழந்தைகளின் நிலை என்னவாகும் என்று கடவுளுக்கு மட்டுமே தெரியும்!

குழந்தைகளிடம் திணிக்கப்படும் முரண்பாடுகள்

பள்ளியில் சேரும்போதே சாதியின் பெயரைக் கேட்கிறார்கள். பிறகு வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் சாதியின் அடிப்படையில்தான் எல்லாமே நடக்கிறது.

இதற்கு நடுவே சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் ஊர்வலம் போகச் சொல்கிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! முதலில் அனைத்து இடங்களிலும் சாதியின் பெயரால் பிரித்தாளும் கொள்கையை கைவிட்டால்தானே சமூகத்தில் நல்லிணக்கம் ஏற்படும்.

சமூக நல்லிணக்க இருவாரவிழாவையொட்டி மதுரையில் சுற்றுலாத்துறை சார்பில் மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர். (தினமலர் 3.9.2011)

இந்தியா ஒளிர்கிறது!

வல்லரசாகி ஒளிரப்போகும்!! இந்தியாவில் மட்டுமே குழந்தைகளுக்கு நடக்கும் அதிசயம்.

வயிற்று பிழப்புக்காக .... வயிற்று பிழப்புக்காக திருச்செங்கோடு பழைய பஸ் டாண்டில் இருபுறமும் கட்டப்பட்ட கயிற்றில் சக்கரத்தில் நின்று தலையில் கரகத்துடன் வித்தை காட்டி ஆபத்தான நிலையில் மக்களிடம் பிச்சை எடுக்கும் சிறுமி. (தினமலர் செய்திப்படம் 23.8.2011)

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் இந்தியாவில் இருக்கிறது. பெண்கள் நல வாரியம் என்று தனியாக ஒரு வாரியம் கூட இருக்கிறது.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இந்தியாவை நன்றாக ஒளிர வைத்து விடுவார்கள். எதில் ஒளிரப்போகிறது என்று பார்த்தால் பொய் வரதட்சணை வழக்குப்போட்டு குடும்பங்களை சிதைத்து குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு நன்றாக ஒளிரவைத்து விடுவார்கள்.

இப்போதே அது நன்றாக அமோகமாக நடந்துவருகிறது. பல குழந்தைகளுக்கு பெற்ற தகப்பன் பெயர்கூட தெரியாமல் பல குடும்பங்களை சிதைத்து பல அப்பாவிகளின் வயிற்றெரிச்சலில் ஒளிர வைத்துவிட்டார்கள்.

சென்னை நகரில் குழந்தைகளின் அவல நிலை

இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தின் தலைநகரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கே இந்த அவலநிலையென்றால் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளில் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் படத்தை பாக்கும் தருணத்தில் இந்தியாவில் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று ஒரு மத்திய அமைச்சரகம் இருக்கிறது என்பது கட்டாயம் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஊழல் ஒழியாதவரை எத்தனை அரசாங்கம் வந்தாலும் குழந்தைகளின் இன்னல்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

(தினமலர் செய்திப்படம் 18/8/2011)