இந்தியா ஒளிர்கிறது!

வல்லரசாகி ஒளிரப்போகும்!! இந்தியாவில் மட்டுமே குழந்தைகளுக்கு நடக்கும் அதிசயம்.

வயிற்று பிழப்புக்காக .... வயிற்று பிழப்புக்காக திருச்செங்கோடு பழைய பஸ் டாண்டில் இருபுறமும் கட்டப்பட்ட கயிற்றில் சக்கரத்தில் நின்று தலையில் கரகத்துடன் வித்தை காட்டி ஆபத்தான நிலையில் மக்களிடம் பிச்சை எடுக்கும் சிறுமி. (தினமலர் செய்திப்படம் 23.8.2011)

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் இந்தியாவில் இருக்கிறது. பெண்கள் நல வாரியம் என்று தனியாக ஒரு வாரியம் கூட இருக்கிறது.

எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து இந்தியாவை நன்றாக ஒளிர வைத்து விடுவார்கள். எதில் ஒளிரப்போகிறது என்று பார்த்தால் பொய் வரதட்சணை வழக்குப்போட்டு குடும்பங்களை சிதைத்து குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு நன்றாக ஒளிரவைத்து விடுவார்கள்.

இப்போதே அது நன்றாக அமோகமாக நடந்துவருகிறது. பல குழந்தைகளுக்கு பெற்ற தகப்பன் பெயர்கூட தெரியாமல் பல குடும்பங்களை சிதைத்து பல அப்பாவிகளின் வயிற்றெரிச்சலில் ஒளிர வைத்துவிட்டார்கள்.

சென்னை நகரில் குழந்தைகளின் அவல நிலை

இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழகத்தின் தலைநகரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கே இந்த அவலநிலையென்றால் கிராமங்களில் இருக்கும் குழந்தைகளில் நிலை எப்படி இருக்கும்?

இந்தப் படத்தை பாக்கும் தருணத்தில் இந்தியாவில் குழந்தைகள் நல்வாழ்வு அமைச்சகம் என்று ஒரு மத்திய அமைச்சரகம் இருக்கிறது என்பது கட்டாயம் அனைவருக்கும் நினைவிற்கு வரும். ஊழல் ஒழியாதவரை எத்தனை அரசாங்கம் வந்தாலும் குழந்தைகளின் இன்னல்கள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

(தினமலர் செய்திப்படம் 18/8/2011)