ஒழுங்கு முறையற்ற இந்தியக் கல்விக்கூடங்கள்

பணத்தாசை மிகுதியால் அரசாங்கம் கல்வித்துறையை தரமற்றவர்களுக்கு விற்றுவிட்டு சாராயம் காய்ச்சி விற்கும் தொழிலை அரசாங்கத் தொழிலாக வைத்திருக்கிறது.
இதன்விளைவாக இந்தியாவில் பல தரமற்ற தனியார் கல்வி நிறுவனங்கள் காளான்கள் போல முளைத்து அப்பாவிக் குழந்தைகளின் உயிரை பலிவாங்குவதோடு மட்டுமல்லாமல், பல தரமற்ற தனியார் கல்லூரிகள் மூலம் பல இளைஞர்களின் வாழ்வையும் நாசமாக்குகிறார்கள் என்று செய்தித்தாளில் வரும் செய்திகள் மூலம் தினமும் பார்க்கிறோம்.

கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் நடந்த தீவிபத்திற்கு இன்னும் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதற்குப் பிறகும் இன்னும் பல தரமற்ற தனியார் பள்ளிகள் அரசாங்க ஆதரவோடு இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. கடவுள்தான் காப்பாற்றவேண்டும்.

கோவில்பட்டி தனியார் மெட்ரிக் பள்ளியில், மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், படுகாயமடைந்த எல்.கே.ஜி., மாணவியர்.