இந்தியக் குழந்தைகள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் குழந்தைகள் நல அமைச்சகம் என்று ஒன்று இருக்கிறது என்று இப்போதாவது தெரிந்துகொள்ளுங்கள். அதனால்தான் இந்தியக் குழந்தைகள் இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஊழலற்ற நாட்டில் மட்டுமே எந்தப்பணியும் நேர்மையாக நடக்கும். அதுவரை எத்தனை அமைச்சகம் வைத்தாலும் சரி, மக்களின் வரிப்பணத்தை “பட்ஜெட்” என்ற பெயரில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்துகொண்டாலும் சரி. அப்பாவி பொதுமக்கள் துன்புற்றிருக்கவேண்டியதுதான்.



தினமலர் செய்திப்படம் 29.7.201

குழந்தையின் அழுகுரல் கேட்காமலிருக்க ஒரு வழி

இந்தியாவில் குழந்தைகளின் நலனை கவனிப்பதற்கென்றே தனியாக ஒரு மத்திய அமைச்சகம் அதற்கு ஒரு அமைச்சர், வருடந்தோறும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியக் குழந்தைகளுக்கு நாட்டில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று பாருங்கள்.

மேலை நாடுகளில் இதற்குப் பெயர் மனித உரிமை மீறல் என்று பெயர். இந்தியாவில் மனித உயிரா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் நிலையில் இந்தக் குழந்தைகளுக்காக யார் கவலைப்படப் போகிறார்கள்?


இப்படியா செய்வது...!பள்ளிக்கு பாடம் படிக்க வந்த மாணவ, மாணவிகளை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் வேனில் ஏற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினர். விபரம் தெரியாத மாணவ, மாணவிகள் ஓ வென கதறி அழுதனர். (தினமலர் 27/7/2011)

அமைச்சரகம் இந்திய மருமகள்களின் உரிமையை பாதுகாக்கும் முக்கியப் பணியில் மூழ்கி இருப்பதால் குழந்தைகள் நலனைப் பற்றி கவனிக்க நேரமிருக்காது. மருமகள்களின் உரிமையைப் பாதுகாக்க பல சட்டங்களை இயற்றும் பணியில் மட்டுமே மூழ்கிவிட்டால் மற்ற வேலைகள் மறந்துவிடும் போலிருக்கிறது.