ஆண்களும், குழந்தைகளும் ஒன்றுதான்

இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்களும் குழந்தைகளும் ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள். ஆண்களுக்கு சட்டப்பாதுகாப்பு இல்லை! இந்தியக் குழந்தைகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை!!


'இவர்களுக்கு எப்போது சுதந்திரம்: தேனி மாவட்டம், வைகை அணை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் மாணவ, மாணவிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டனர். (தினமலர் செய்திப்படங்கள் 13.8.2011)

தேனி மாவட்டம், வைகை அணை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் மாணவ, மாணவிகளை சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் உத்தரவிட்டதையடுத்து குடத்தில் தண்ணீர் கொண்டு வரும் மாணவிகள்.


எந்தவித கேள்வி முறையுமின்றி இந்திய ஆண்கள் மீது எந்தப் பெண் வேண்டுமானாலும் கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், வரதட்சணைக் கொடுமை என பல பொய் குற்ற வழக்குகளைப் பதிவு செய்யலாம். அதே போல குழந்தைகளை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கொடுமை செய்யலாம். இந்த இரண்டு அநீதியையும் கேட்பதற்கு ஆளில்லை.

மேலை நாடுகளில் இருப்பது போல பெண்களுக்கு உரிமை வழங்கும் “Women Empowerment” திட்டத்தை அவசர அவசரமாக இறக்குமதி செய்து பல சட்டங்களை இயற்றும் அரசாங்கம் குழந்தைகள் நலனுக்காக ஒரு அமைச்சரையே வைத்திருந்தாலும் இந்தியக் குழந்தைகளின் நலனில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா?

மேலை நாடுகளில் இதுபோல பள்ளிக் குழந்தைகள் நடத்தப்பட்டால் அது கொடிய மனித உரிமை மீறும் குற்றமாக கருதப்படும். ஆனால் இந்தியாவில்?

No comments: