இந்தியக் குழந்தைகளுக்கு மட்டுமே நடக்கும் அதிசயம்

இதுபோன்ற அதிசயமான சம்பவங்கள் இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த அவலம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பெற்றவர்களுக்கும் அக்கறையில்லை. குழந்தைகள் நலனுக்காக தனியாக அமைச்சகம் நடத்திக்கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கும் அக்கறையில்லை.

இலவச பஸ் பாஸ் என்பதால் "கலெக்ஷன்' வராது என பல அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் ஸ்டாப்பில் பஸ்சை நிறுத்துவது இல்லை. இதனால் கையில் புத்தகப்பை சுமையுடன் உயிரை வெறுத்து ஓடி பஸ்சை பிடிக்க நேரிடுகிறது. இதில் மாணவர்கள் அடித்து பிடித்து ஏறுவதால் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. (தினமலர் செய்திப்படம் 2/8/11)



ஈரோடு பெரியவலசு நடுநிலைப்பள்ளி மாணவியர் களப்பயணமாக அரசு அருங்காட்சியகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் பூங்கா ரோட்டில் உட்கார வைத்திருந்த அவல நிலை. (தினமலர் செய்திப்படம் 2/8/11)

2 comments:

BoobalaArun said...

இந்த அவல நிலை என்று நீங்கும் இந்த இந்தியாவில்...

குழந்தைகளை காக்க மறந்து நாளைய நாளுக்காக இங்கே எதற்காக ஆட்சி நடத்த வேண்டும்...

ஒரு குழந்தை இறந்தாலும் அதை இங்கே அரசியலாக்கும் குரூர எண்ணம் கொண்ட தலைவர்களும் தலைவிகளும் வாழ்ந்து எதற்கு ?

மனிதனாய் வாழவே தெரியாமல் இங்கே மனிதர் என பலர் திரிகிறார்கள்...

உண்மையில் சொல்ல போனால் "ஊழல் இல்லாமல் போகும் நாள் தான் இந்த இந்தியாவுக்கு விடியல்"

வெளிச்சத்தை நோக்கி நடை போட நாமும் அடி எடுத்து வைப்போம். நாளையே கூட நாம் இலக்கை அடையலாம்...

உங்கள் எழுத்துக்கள் உண்மையானவை , அதை தொடர்ந்து செய்யுங்கள்...

498A-குழந்தை said...

உங்கள் கருத்தினை பதிவு செய்தமைக்கு நன்றி.